districts

img

மலம் குடிப்பதோ... நம் மக்கள்...

சேலம், பிப்.21- “மலம் குடிப்பதோ! நம் மக் கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம் சார்பில் மகா கவிய ரங்கம் அண்ணா நூலக மாடியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம். வேங்கைவயலில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி யில் மலம் கலந்த சாதி ஆதிக்கவாதிகளின் சாதி வெறியின் வெளிப்பாட்டை கண்டித்து சேலம் மாவட்ட தமுஎகச நடத்திய மகா  கவியரங்கம், ஓவியக் கண்காட்சி மற்றும்  கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.  தமு எகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ஜோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 30 பேர் கவியரங்கத்திலும் 40 மாணவ மாணவிகள் ஓவிய போட்டிகளிலும் பங்கேற்றனர். மேலும், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் அன்பரசன் பங் கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் என்.பிரவீன் குமார், தமுஎகச மாவட்ட தலைவர் எஸ்.வசந்தி, மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் ஷேக் அப்துல்லா உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். முடிவில், மாவட்ட உதவித்தலைவர் சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.